நடிகையும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஆர்.கே.ரோஜா, ஆந்திராவில் கடந்த 2019 முதல் 2024 வரையிலான ஜெகன்மோ கன் தலைமையிலான ஆட்சியில் சுற்றுச் சூழல் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக (2 ஆண்டுகள் மட்டும்) இருந் தார். அமைச்சராக இருந்த காலத்தில் “ஆடுதாம் ஆந்திரா” என்ற பெயரில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளை ரோஜா நடத்தினார். இந்த போட்டிகளுக்காக ரூ.150 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருந்த நிலையில், முன் னாள் தேசிய கபடி வீரரும், ஆத்யா-பாட்யா சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஆர்.டி.பிரசாத் “ஆடு தாம் ஆந்திரா” விளையாட்டுப் போட்டி க்கு ஒதுக்கப்பட்ட நிதியில் பெருமளவு முறைகேடு புகார் அளித்திருந்தார்.
அதாவது வெறும் 40 நாட்கள் மட்டுமே நடத்தப்பட்ட இந்த விளையாட்டுப் போட்டிக்கு ஒதுக்கப்பட்ட ரூ.150 கோடி நிதியில் ரூ.120 கோடி மட்டுமே செல விடப்பட்டதாகவும், மீதமுள்ள ரூ.30 கோடி ரூபாய் கையாடல் செய்யப் பட்டுள்ளதாகவும் ஆர்.டி.பிரசாத் ஆந்திர அரசிடம் அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக முன் னாள் அமைச்சர்கள் ஆர்.கே.ரோஜா, தர்மனா கிருஷ்ணதாஸ் (ஆந்திரப் பிர தேச ஒலிம்பிக் சங்கத்தின் முன்னாள் தலைவர்) ஆகியோர் மீதான ஊழல் புகாரில் ஆந்திர மாநில சிறப்பு குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) விசாரணை யைத் தொடங்கியுள்ளது. “ஆடுதாம் ஆந்திரா” ஊழல் வழக்குத் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஆர்.கே.ரோஜா எப்பொழுது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகி யுள்ளது.